ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றுகொண்டிருந்த சந்தேகநபர், பேலியகொடை வனவாசல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி – திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(16) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.