மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 185(1) வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் நோயல் ஸ்டீபன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.