பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
![ranil](https://lankanvibe.com/wp-content/uploads/2023/05/Ranil-5-e1656516058887-1024x715.jpg)
இந்த சந்திப்பின்போது 200 வருடங்களாக இந்த நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை, சுகாதாரம், பாதுகாப்பு, பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற முகாமைத்துவம், சமுர்த்தி, நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/06/image-74-714x1024.png)
பல பெருந்தோட்ட நிலங்கள் காடுகளாக மாற்றப்பட்டுள்ளமை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.