Saturday, July 27, 2024
HomeTamilவடிவேல் சுரேஷ் – ஜனாதிபதி இடையே சந்திப்பு !

வடிவேல் சுரேஷ் – ஜனாதிபதி இடையே சந்திப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ranil

இந்த சந்திப்பின்போது 200 வருடங்களாக இந்த நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை, சுகாதாரம், பாதுகாப்பு, பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற முகாமைத்துவம், சமுர்த்தி, நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பல பெருந்தோட்ட நிலங்கள் காடுகளாக மாற்றப்பட்டுள்ளமை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular