எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகத்தை ஒப்படைப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.