Saturday, July 27, 2024
HomeTamilதபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கெடுப்புக்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் , அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular