சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 80,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பளை – புஸ்ஸல்லாவை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.