சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (07) இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடைபெற்றுவருகிறது
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை (08) மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.