கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஒரு நாள் தாமதத்துடனேயே முன்னெடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வாரம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, மறுநாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com