Saturday, July 27, 2024
HomeTamilஇறந்த ஆணின் உடல் எச்சங்கள் மீட்பு!!

இறந்த ஆணின் உடல் எச்சங்கள் மீட்பு!!

வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (13) இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணமல் போன ஒருவரின் சடலமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌. இந்நிலையில் இவ் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனால் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular