Saturday, July 27, 2024
HomeTamilதுப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் பலி!

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் பலி!

கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (13) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இராணுவ படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு இராணுவ சிப்பாய்கள் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய சென்ற போது துப்பாக்கி தவறுதலாக இயங்கியதன் காரணமாகவே இந்த பெண் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular