Saturday, July 27, 2024
HomeTamilவிவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30 ஆயிரம் ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவி திட்டத்தின் கீழ் இந்த நிவாரண நிதி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 06 மாவட்டங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 48 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளில் தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கடவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களை கொண்ட நெற்செய்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular