Saturday, July 27, 2024
HomeTamilதபால்மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

தபால்மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது.

மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போது குறித்த தீர்மானங்கள் எட்டப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular