எந்தவொரு நாட்டுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதால், சட்டங்களை அமுல்படுத்துமாறு தமக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியோ அல்லது இந்திய அரசோ என்னை வற்புறுத்தவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஜேர்மனி என இருந்தாலும், இந்த அனைத்து நாடுகளுடனும் நான் நெருங்கிய உறவைப் பேணி வந்தேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல் தலைவர்கள் வைத்திருக்க வேண்டிய கலை இது.
உள்ளூராட்சி முறைமையின் பொருத்தத்தை மீளாய்வு செய்ய தொடர்ச்சியான அரசாங்கங்கள் தவறிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.