Saturday, July 27, 2024
HomeTamilவாழ்க்கை முறைபொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!!

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!!

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி ரயில் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படும் பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர் 45 வயதுடைய அழகிய சருமம், கறுப்பு – வெள்ளை முடி மற்றும் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட பெண் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை நிற மேலாடை மற்றும் வெளிர் ஊதா நிற பாவாடை அணிந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular