Saturday, July 27, 2024
HomeTamilதொழிலாளர் சட்டத்தில் மாற்றம்!!

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம்!!

தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளது.

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைக் கூறியுள்ளார்.

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான சட்டமூலம் நேற்று (06) பிற்பகல் தொழிலாளர் ஆலோசனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular