இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ ந்டவடிக்கை மூலம் அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் பணம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது ஜூன் 2022 இல் 274.3 மில்லியன் டொலர்களாக இருந்தது.
இந்த ஆண்டு மே மாதம், இலங்கைக்கு 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் ஊழியர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டது.