விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளிக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட காவல்துறை பிரிவில் கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.