மேல் மாகாணத்தில் நாளை (15) நடத்த திட்டமிடப்பட்டிருந்த தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தரம் 9 க்கான கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள் 21ஆம் திகதியும், தரம் 10 மற்றும் 11ஆம் தரத்துக்கான பாட பரீட்சைகள் 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாளை (15) முன்னெடுக்கவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பங்கேற்க தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .