Saturday, July 27, 2024
HomeTamilபரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு!

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு!

இன்று ஆரம்பிக்கப்பட இருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், சில நாட்களுக்கு பிற்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், சில நாட்களுக்கு பிற்போகக்கூடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதால், சில ஆசிரியர்கள் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular