அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளன.
கனியவளம், துறைமுகம், குடிநீர், மின்சாரம், வங்கித்துறை, மருத்துவம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களின் சங்கங்களினால், இந்த கறுப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com