இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி உள்ளிட்ட இலத்திரனியல் இயந்திரங்களை திருடியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளனர்.
கிருலப்பனை பகுதியிலுள்ள ஓடையொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com