Saturday, July 27, 2024
HomeTamilபொருளாதாரம்அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!!

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!!

அரிசியின் விலைக் கட்டுப்பாட்டை கடுமையாக அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முறைகேடான வர்த்தகர்களை இலக்கு வைத்து நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யவில்லை என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வர்த்தமானி எண். 2278/02 மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

எனவே, வியாபாரிகள் ஒரு கிலோ கீரி சம்பாவை ரூ.260க்கும், சம்பாவை ரூ.230 க்கு மேல் விற்பனை செய்ய அனுமதி இல்லை என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. நாட்டரிசி ரூ. 220க்கும், சிவப்பு அரிசி ரூ.210க்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு அரிசியை வியாபாரிகள் விற்பனை செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

1977 என்ற ஹொட்லைன் ஊடாக இத்தகைய வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

விலைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் தனிநபர் வணிகம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபா முதல் .முதல் 500,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான புகார்களுக்கு அமைய வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular