QR முறைப்படி எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com