Saturday, July 27, 2024
HomeTamil100 கிலோ கேரள கஞ்சா மீட்பு!!

100 கிலோ கேரள கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் – காரைநகரில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 101 கிலோகிராம் 750 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடற்படையினர் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, 11 ஆயிரத்து 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளைபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular