இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற மேலும் ஏழு அகதிகள் இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்
மன்னார் பகுதியில் இருந்து அவர்கள் படகு மூலம் சென்று தனுஷ்கோடியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் – சுழிபுரத்தைச் சேர்ந்த குறித்த ஏழு பேரும், ஒரே குடும்ப உறுப்பினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.