நுவரெலியா – கிரக்கரி வாவியிலிருந்து இன்று மாலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாவியில் சவாரியில் ஈடுபடும் படகோட்டிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட ஆணொருவரினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com