சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020 -2021ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைகுறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த வசிப்பிட வசதி செய்துள்ள அனைத்து பீடங்களின் மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020/2021 வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து பீடங்களின் மாணவர்கள் இன்று (16) மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com