இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வுன் ஜின் ஜியோங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தென்கொரியாவின் பூசான் மெட்ரோபொலிடன் நகர சபையின் அங்கத்தவர்கள் 13 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 2030 ஆம் ஆண்டளவில் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள பூசான் உலக கண்காட்சி தொடர்பில் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com