Saturday, July 27, 2024
HomeTamilஅனுராதபுரத்திற்கு இன்று முதல் விசேடபேரூந்து சேவை!!

அனுராதபுரத்திற்கு இன்று முதல் விசேடபேரூந்து சேவை!!

பொசனை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் மேற்பார்வையில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, தேசிய, சமய மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொசன் பௌர்ணமி தினத்தன்று மிஹிந்தலாய, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலைக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு அமைச்சர் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

Bandula Gunawardena

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 502 இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தி பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனுராதபுரம் டிப்போவில் இருந்து 85 பேரூந்துகளும், பொலன்னறுவை டிப்போவில் இருந்து 125 பேரூந்துகளும், ஹொரவ்பத்தானை டிப்போவில் இருந்து 45 பேரூந்துகள், கெக்கிராவ டிப்போவில் இருந்து 35 பேரூந்துகள், கெபித்திகொல்லாவ டிப்போவில் இருந்து 32 பேரூந்துகள், தம்புள்ளை டிப்போவில் இருந்து ரஜரட்ட பிரதேச பக்தர்களின் வசதிக்காக 50 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்படவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular