கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் புகையிரதம் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த மாணவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டி,மாதபோவல பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவன் கைப்பேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் செல்லும் மேம்பாலத்தில் செல்லாமல் புகையிரத வீதியை கடக்க முற்பட்ட போது புகையிரதத்தில் அடிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com