ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் மேற்கொள்ளும் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) இன்று தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் லலித் தர்மசேகர இவ்வாறு தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மேல் மாகாண சபை குழுவொன்றை நியமித்துள்ள போதிலும், துரதிஷ்டவசமாக இதுவரை கட்டண ஒழுங்குமுறை எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தீர்மானங்களின்படி வாடகை வண்டி கட்டணங்களை திருத்துவதில்லை என சங்கம் தீர்மானித்திருந்தது.
முச்சக்கர வண்டி சாரதிகள் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்களின் வாடகைக் கட்டணங்கள் தொடர்பில் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்குமாறு தர்மசேகர கேட்டுக்கொண்டார்.