Saturday, July 27, 2024
HomeTamilதீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயோதிப் பெண்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென காவல்துறையினரின் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தும் காவல்துறையினர் கொலையா? அல்லது தற்கொலையா? தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular