2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 73,032 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 15,509 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 34,700 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண வாரியாக அதிகபட்சமாக நவம்பர் மாதத்தில் 4,539 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நிலவும் மழையினால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.