யாழ்ப்பாணம் – தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த மூதாட்டி நேற்று காலையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் மூதாட்டியின் தலைப்பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர் .
82 வயதுடைய தம்பையா சரோஜினி என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் .
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.