Saturday, July 27, 2024
HomeTamilபண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம்!!

பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம்!!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், கால்நடைகள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular