சுமார் 50,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (02) இருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
53,200 சிகரெட்டுகளும் சுமார் ரூ. 12.6 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
கொழும்பில் வசிப்பவர்கள் என அடையாளம் இவர்கள் இருவரும் அதிகாலை ஃப்ளை டுபாய் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.