Saturday, July 27, 2024
HomeTamilயாழில் 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் சுமார் 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவுடன் பயணித்தபோது கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular