நாட்டின் மேற்கு கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன்றும் நாளையும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வில் நாரா எனப்படும் நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் நான்கு பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், கடற்படையின் நீரியல்வள ஆய்வு பிரிவின் இரண்டு அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்துகொள்ளவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.