ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்பட்ட போதிலும் மின்சாரக் கட்டணங்கள் உட்பட பல துறைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் உடன்படிக்கைகளுக்கு அமைய அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் VAT பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது தற்காலிக நடவடிக்கையே என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.