போலியான சான்றிதழ்களை காண்பித்து மற்றுமொரு புற்றுநோய் தடுப்பூசியை விநியோகிப்பதற்கான தயார்படுத்தல் இடம்பெறுவதாக சுகாதார தொழிற்சங்கவியலாளர்களின் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் ரவி குமுதேஷ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி குப்பிகள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அமைச்சரவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பினரும் அறிந்திருந்த போதிலும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.