Saturday, July 27, 2024
HomeTamilவாகன விபத்து - மாணவன் சம்பவ இடத்திலேயே பலி!!

வாகன விபத்து – மாணவன் சம்பவ இடத்திலேயே பலி!!

கல்முனை – மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு வீதியில் நாவக்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த மாணவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுங்கவில, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிற்றூந்தின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular