இன்று அதிகாலை இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது 6.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் மையமாக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்தால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை.
பொருட்சேதம், உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.