நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வெலிவேரிய பிரதேசத்தில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பின்னர் காவல்துறையினர் தொலைபேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில், பாதுகாப்பாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.