விவசாயப் பயிர்ச்சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
65 ஆயிரம் விவசாயிகளுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் எமது செய்திச்சேவைக்கு குறிப்பிட்டார்.
ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.