Saturday, July 27, 2024
HomeTamilபுகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 32 பேர் பலி!!!

புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 32 பேர் பலி!!!

கிரீஸ் நாட்டில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் புகையிரதம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் புகையிரதம் சென்று கொண்டிருந்தவேளை அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு புகையிரதம் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு புகையிரதங்களும் நேருக்கு நேர் மோதியதால் புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன், மேலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular