கிளிநொச்சி, உருத்திரப்புரம் – சிவநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கின் போது ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மோதல் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.