Saturday, July 27, 2024
HomeTamilகாவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கட்டுநாயக்க மடவல பிரதேசத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை காவலில் இருந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

கொலை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க காவல்துறையினர் குறித்த நபரை மாத்தறையில் வைத்து நேற்று (22) கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க இன்று காலை 6 மணியளவில் கட்டுநாயக்க மடவளை பகுதியில் உள்ள மாதுவ சதுப்பு நிலத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை மீட்கும் போது, ​​சந்தேக நபர் காவல்துறை அதிகாரிகள் மீது கைக்குண்டை வீச முற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular